Publish Date: Fri, 06 Nov 2020 (10:38 IST)
Updated Date: Fri, 06 Nov 2020 (11:00 IST)
நேற்று நடந்த குவாலிபையர் போட்டியில் எளிதாக வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்புச் சீட்டுகளில் ஒன்றாக கருதப்படுபவர் பூம்ரா. ஆனால் இந்த சீசன் ஆரம்பத்தில் அவர் பந்துவீச்சில் அதிக ரன்கள் கொடுத்தார். இது அவர் மேலான அழுத்தத்தை அதிகமாக்கியது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது அவரை 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீச அழைத்தது. அப்போது பந்து பழையதாகி விடுவதால் அவரால் ஸ்விங் செய்ய முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் தொடக்க ஓவர்களை வீச அனுமதிக்கப்பட்டார்.
அதிலிருந்து அவரின் பழைய ஆட்டம் மீண்டும் வந்தது. பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்களை சாய்த்து வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன்மூலம் 27 விக்கெட்களை சாய்த்து பர்ப்பிள் கேப்பை அவர் பெற்றுள்ளார்.