Publish Date: Thu, 05 Nov 2020 (10:22 IST)
Updated Date: Thu, 05 Nov 2020 (10:40 IST)
ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
பரபரப்பாக நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. இதனையடுத்து இப்போது ப்ளே ஆஃப் போட்டிகள் இப்போது தொடங்க உள்ளன. முதல் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் வலுவான மும்பை அணியை எதிர்கொள்வது குறித்து டெல்லி அணியின் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் மும்பை இந்தியன்ஸ் மிகச்சிறந்த அணிகளில் ஒன்று. ஆனால் நாங்களும் அச்சமின்றி விளையாடும் அணிதான். அவர்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கிரிக்கெட்டில் அன்றைய நாளின் செயல்பாட்டைப் பொறுத்தே முடிவுகள் அமையும். எனக் கூறியுள்ளார்.