“எங்க பொருளை எடுத்து எங்களையே போட்டாங்க”… இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து!

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (07:49 IST)
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.  இந்த தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமாக ஆடிவரும் பாஸ்பால் அனுகுமுறைக்கு இந்திய வீரர்கள் மூடுவிழா நடத்திவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் “நாங்கள் எப்படி விளையாட விரும்பினோமோ அப்படி இந்தியா விளையாடியது. இன்னும் சொல்லப்போனால் எங்களை தாண்டி விளையாடியது.  அவர்களின் ஆட்டத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு பயம் வந்துவிட்டது.

நீங்கள் வெளிப்பட்டு நிற்கும் அதைவிட சிறந்ததாக மாறவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. இன்னும் கொஞ்சம் ஆழ்ந்த புரிதலும் சில மாற்றங்களும் தேவைப் படுகிறது. அடுத்த சில மாதங்களில் நாங்கள் கடுமையாக உழைத்து இப்போது இருப்பதை விட இன்னும் சிறப்பான அணியாக திரும்பி வருவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments