ரிஷப் பண்ட்டுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய என்சிஏ… ஐபிஎல் தொடரில் ரி எண்ட்ரி!

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (06:57 IST)
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் பயிற்சி ஆட்டங்களில் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமி அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடையில்லா உடல்நல சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவரின் வருகை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்பஜன் சிங்கை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த ஸ்ரீசாந்த்! முடிவுக்கு வராத 'ஸ்லாப்கேட்' சர்ச்சை:

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை: பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களில் அசைக்க முடியாத சாதனை.!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே படைத்த 3 சாதனைகள்..!

உள்நாட்டு போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும்: பிசிசிஐ அறிவுறுத்தல்..!

அபிஷேக் சர்மா அடித்த அபார சதம்.. துள்ளி குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments