Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“இந்திய அணியில் கோலியின் இடம் அவர்கள் கையில்தான் உள்ளது..” கைவிரிக்கிறதா பிசிசிஐ?

“இந்திய அணியில் கோலியின் இடம் அவர்கள் கையில்தான் உள்ளது..” கைவிரிக்கிறதா பிசிசிஐ?
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:07 IST)
விராட் கோலி அணிக்குள் வருவது தேர்வுக்குழுவில் உள்ளவர்களின் கையில்தான் உள்ளது என சொல்லப்படுகிறது.

ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐக்கு விராட் கோஹ்லி சமீபத்தில் ”தான் ஆசியக் கோப்பையில் இருந்து விளையாட தயாராக இருப்பேன்” என்று செய்தியை அனுப்பி உள்ளாராம். இதையடுத்து இனிமேல் தொடர்ந்து அவர் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் இப்போது கோலியின் மறு வருகை குறித்து கூறியுள்ள பிசிசிஐ அதிகாரி “கோலியின் இடம் குறித்து பிசிசிஐ-யின் தேர்வுக்குழு பொறுப்பில் உள்ளவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.  கோலி ஒரு ஜாம்பவான் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் விரைவில் பழைய ஃபார்முக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் ஆசை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமன்வெல்த் கிரிக்கெட்: 46 ரன்களில் சுருண்ட இலங்கை மகளிர் அணி