ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

vinoth
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (17:04 IST)
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஒரு புதிய விதியை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது. இனிவரும் போட்டிகளில் அனைத்து பேட்ஸ்மேன்களும், தங்கள் பேட்டை சோதனைக்கு உட்படுத்தி அதன் பின்னரே களமிறங்க முடியும்.

இந்த தொடருக்கு சில முறை ஃபில் சால்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பேட்களை நான்காம் நடுவர் சோதனை செய்தார். இந்நிலையில் இனிமேல் எல்லா பேட்ஸ்மேன்களும் இந்த சோதனைக்கு உள்ளாக்கபட உள்ளனர். இதற்கு முன்பாக இந்த சோதனை வீரர்கள் அறையில் நடந்த நிலையில் வெளிப்படைத் தன்மைக்காக களத்திலேயே இப்போது சோதனை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு வீரரின் பேட்டும் பின்வரும் அளவை மீறக்கூடாது: அகலம்: 4.25 அங்குலம் / 10.8 செ.மீ, அடர்த்தி? 2.64 அங்குலம் / 6.7 செ.மீ, ஓரத்தின் அளவு: 1.56 அங்குலம் / 4.0 செ.மீ. இந்த அளவுகளோடு நடுவர் வைத்திருக்கும் அளவுகோள் உள்ளே பேட் செல்லும் வகையில் இருக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments