Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

vinoth
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (17:04 IST)
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஒரு புதிய விதியை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது. இனிவரும் போட்டிகளில் அனைத்து பேட்ஸ்மேன்களும், தங்கள் பேட்டை சோதனைக்கு உட்படுத்தி அதன் பின்னரே களமிறங்க முடியும்.

இந்த தொடருக்கு சில முறை ஃபில் சால்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பேட்களை நான்காம் நடுவர் சோதனை செய்தார். இந்நிலையில் இனிமேல் எல்லா பேட்ஸ்மேன்களும் இந்த சோதனைக்கு உள்ளாக்கபட உள்ளனர். இதற்கு முன்பாக இந்த சோதனை வீரர்கள் அறையில் நடந்த நிலையில் வெளிப்படைத் தன்மைக்காக களத்திலேயே இப்போது சோதனை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு வீரரின் பேட்டும் பின்வரும் அளவை மீறக்கூடாது: அகலம்: 4.25 அங்குலம் / 10.8 செ.மீ, அடர்த்தி? 2.64 அங்குலம் / 6.7 செ.மீ, ஓரத்தின் அளவு: 1.56 அங்குலம் / 4.0 செ.மீ. இந்த அளவுகளோடு நடுவர் வைத்திருக்கும் அளவுகோள் உள்ளே பேட் செல்லும் வகையில் இருக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments