Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் தொடர்…. மைதானப் பராமரிப்பாளர்களுக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத் தொகை!

Advertiesment
ஐபிஎல் தொடர்…. மைதானப் பராமரிப்பாளர்களுக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத் தொகை!
, செவ்வாய், 31 மே 2022 (09:32 IST)
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணி டைட்டில் வென்றுள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய டி 20 கிரிக்கெட் லீக் தொடராக இருந்து வருகிறது. இதில் கிடைக்கும் பணம் பல வீரர்களுக்கு அவர்களின் ஆண்டு ஊதியத்தை விட அதிகமாக இருக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிட் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் இந்தியாவில் முழு ஐபிஎல் தொடரும் நடந்தது.

இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. இந்நிலையில் பிசிசிஐ சார்பாக இந்த ஆண்டு மைதானங்களைப் பராமரித்து போட்டிகளை சிறப்பாக நடத்த உதவிய மைதானப் பராமரிப்பாளர்களுக்கு சுமார் 1.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு போட்டிகள் நடந்த 6 மைதானத்தைச் சேர்ந்த பராமரிப்பாளர்களுக்கு இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த டார்கெட் இதுதான்… ஹர்திக் பாண்ட்யாவின் ஆசை இதுதானாம்