Publish Date: Thu, 22 Dec 2022 (21:56 IST)
Updated Date: Thu, 22 Dec 2022 (22:00 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், கேப்டன் பொறுப்பில் இருந்து பாபரை நீக்க முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரைக்கும் சென்று இரண்டாம் இடம் பெற்றது.
இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 14 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
தற்போது 3 டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.
சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய பாகிஸ்தானுக்கு விமர்சனம் குவிந்து வருகிறது.
மேலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமுக்கு எதிராக முன்னாள் கருத்து கூறி, அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்ன விமர்சனம் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், பாபர் ஆசம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.