Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் அவர்தான்… கோலியே புகழ்ந்த வீரர்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (07:46 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி  போல ரன்களைக் குவித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அதில் இருந்து அவரின் பேட்டிங் செயல்பாடு மந்தமாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி “தற்போது விளையாடி வரும் வீரர்களில் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர் பாபர் ஆசம்தான். அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் பேட்டிங்கை நான் விரும்பி பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.

மூன்று வடிவிலான போட்டிகளிலும் 50 ரன்கள் சராசரியை வைத்திருக்கும் ஒரே வீரரான கோலி, இளம் வீரரான பாபர் ஆசமைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!

ஜிம்பாப்வே தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு… பிசிசிஐ முடிவு!

கம்பீர் மட்டுமில்லை, இந்த தமிழக வீரரும் விண்ணப்பித்துள்ளாரா? இந்திய அணிக்கு யார் அடுத்த பயிற்சியாளர்?

சாதனை நாயகி ஸ்மிருதி மந்தனா! அதிக சதங்கள் அடித்த மிதாலி ராஜின் சாதனை சமன்!

உலகக்கோப்பையில் சொதப்பல்.. ஜிம்பாப்வே டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு..? – என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments