#AsiaCup2023 : அதிரடி பேட்டிங் செய்த நேபாளம் அணி...வெற்றி இலக்கு இதுதான்!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (19:49 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்   இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா இந்தியா –  நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில்  இன்று  நடைபெற்று வருகிறது.
 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணியில், குஷாய் 38 ரன்னும், அசய்ப் 58 ரன்னும், ஜா 23 ரன்னும், திபேந்திரா 29 ரன்னும், காமி 48 ரன்னும் அடித்தனர். 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே இந்திய அணிக்கு 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.

இதற்கு முந்தைய போட்டியைப் பபோன்று இன்றைய போட்டியிலும் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழைக்குப் பின் மீண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில், சமி, பாண்ட்யா, தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிராஜ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments