Publish Date: Wed, 07 Sep 2022 (21:19 IST)
Updated Date: Wed, 07 Sep 2022 (21:21 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் முடிந்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில், ஆஃபாகிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
எனவே முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணியில், சாஹை 21 ரன்களும், குர்பாஷ் 17 ரன்களும்,ஷாட்ரான் 35 ரன்களும் ஜனட் 15 ரன்களும் அடித்துள்ளனர், தற்போது ஷாட்ரன் 10 ரன்களும், ரஷித் கான் 18 ரன் களும் அடித்தனர்.
20 ஓவர்களில்6 விக்கெட்டுகள் இழப்பிற்கு129 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானுக்கு 130 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.