Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

vinoth
புதன், 25 டிசம்பர் 2024 (13:10 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர் ஓய்வு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலரும் அவர் ஒழுங்காக வழியனுப்பப் படவில்லை என்ற குற்றச்சாட்டையே வைத்துள்ளனர். கபில் தேவ் பேசும் போது “சச்சின் மற்றும் கவாஸ்கருக்கு நிகரான டெஸ்ட் வீரர் அஸ்வின்” எனப் பேசியுள்ளார். கவாஸ்கரும் அதுபோல அஸ்வினுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இந்நிலையில் அஸ்வின் தான் இந்திய அணிக்குக் கேப்டனாக தேர்வாகவில்லை என்பது குறித்து வருத்தம் இல்லை எனக் கூறியுள்ளார். அதில் “நான் கேப்டன் ஆவது என் கையில் இல்லை. நான் அணியை வழிநடத்துவேன் என யாரோ ஒரு ஆள் நம்பவேண்டும். சக வீரர்கள் நம்பவேண்டும். நிர்வாகம் என்னைக் கேப்டனாக நியமிக்கவில்லை என்றால் நான் கேப்டனாக தகுதியானவன் இல்லை என்று அர்த்தம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போடா அங்குட்டு.. மும்பை ப்ளேயரை பேட்டால் அடித்து விரட்டிய தோனி! - வைரலாகும் வீடியோ!

சிஎஸ்கே அடுத்த வெற்றியை பார்க்க வேண்டுமா? CSK - RCB போட்டிக்கான டிக்கெட் விற்பனை..!

வழக்கம்போல் முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே... தொடரும் மும்பையின் சோகம்..!

ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!

வெறித்தன பேட்டிங்.. உலக சாதனைப் படைத்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments