Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

Advertiesment
ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

vinoth

, வியாழன், 27 மார்ச் 2025 (15:18 IST)
சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களை விட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லீக் தொடராக மாறி வருகிறது ஐபிஎல். உலகில் கிரிக்கெட் விளையாடும் (பாகிஸ்தான் தவிர) நாட்டு வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எல்லா போட்டிகளும் அதிக ரன்கள் சேர்க்கும் போட்டிகளாக அமைந்து வருகின்றன. 200 ரன்கள் என்பது தற்போது மிகவும் சாதாரண ஒரு இலக்காக மாறியுள்ளது. அதற்கு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒவ்வொரு விதிகளும் மாற்றப்படுவதே காரணம் என்று சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக பவுலர்கள் அவ்வப்போது தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

இப்போது அந்த பட்டியலில் சி எஸ் கே அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வினும் இணைந்துள்ளர். அவர் “கூடிய விரைவில் ஐபிஎல் தொடரில் பந்துவீசும் வீரர்களை உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு உளவியல் ஆலோசனை கொடுக்க நேரிடும். ஏனென்றால் பந்துவீசவே மிகவும் சிரமமாக உள்ளது. வீரர்கள் ஃபுல்டாஸ் பந்துகளை மட்டுமே வீச வேண்டியுள்ளது. பந்தை பிட்ச் செய்தால் அது பேட்மேஸ்களுக்கு ரன்கள் சேர்க்க ஏதுவாக அமைகிறது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?