Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹர்திக் பாண்ட்யா மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த கேப்டன் ஆகிவிட்டார்… இந்திய வீரர் பாராட்டு!

ஹர்திக் பாண்ட்யா மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த கேப்டன் ஆகிவிட்டார்… இந்திய வீரர் பாராட்டு!
, சனி, 7 ஜனவரி 2023 (09:44 IST)
இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொண்டு டி 20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவே முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாண்ட்யாவின் கேப்டன்சியை பாராட்டியுள்ளார். அவரது யுட்யூப் சேனலில் “கேப்டனாக மிகக்குறுகிய காலத்திலேயே பாண்ட்யா வெற்றி பெற்றுவிட்டார். அவர் மிகவும் கூலாக அணியை மைதானத்தில் வழிநட்த்தி செல்கிறார். மேலும் அவர் புத்திசாலிதனமான வீரராகவும் உள்ளார். கபில்தேவ் உலகளவில் மிகச்சிறந்த வீரராக இருந்தார். ஒவ்வொரு காலத்திலும் அப்படி ஒரு வீரர் உருவாகுவார். அப்படி இந்த காலத்தின் வீரராக ஹர்திக் பாண்ட்யா உருவாகலாம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!