Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தமாக கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்த டி வில்லியர்ஸ் – உருக்கமான ட்வீட்

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:02 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக உலக டெஸ்ட் தொடர்கள், டி20, உலகக்கோப்பை என பல தொடர்களில் விளையாடியவர். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடினார்.

இந்நிலையில் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் மொத்தமாக ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டி வில்லியட்ஸ் “இது ஒரு அற்புதமான பயணம். ஆனால் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். இதுவரையிலான அனைத்து போட்டிகளிலும் சக வீரர்களுடன் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் விளையாடி வந்துள்ளேன். இப்போது எனது 37 வயதில் அந்த நெருப்பு அவ்வளவு பிரகாசமாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments