Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைதானத்தில் பறந்த திடீர் விமானம்- என்ன எழுதியிருந்தது தெரியுமா?

மைதானத்தில் பறந்த திடீர் விமானம்- என்ன எழுதியிருந்தது தெரியுமா?
, வெள்ளி, 12 ஜூலை 2019 (16:43 IST)
நேற்று ஆஸ்திரேலியா- இங்கிலாந்து ஆட்டத்தின்போது மைதானத்துக்கு மேலே தோன்றிய திடீர் விமானத்தால் ரசிகர்கள் பதட்டமடைந்தனர்.

நேற்று லண்டன் எக்பாஸ்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடைபெற்றது. போட்டி நடந்து கொண்டிருக்கும்போது வானத்தில் மேகங்களுக்கிடையே திடீரென ஒரு விமானம் தோன்றியது. மைதானத்தை நெருக்கி அந்த விமானம் வந்தது. அந்தன் பின்னால் “உலகம் கண்டிப்பாக பலுசிஸ்தானுக்காக பேச வேண்டும்” என எழுதியிருந்தது. மிகவும் தாழ்வாக பறந்து வந்த அந்த விமானம் மீண்டும் மேகங்களுக்குள் புகுந்து மறைந்தது.

பலுசிஸ்தானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேச வேண்டுமென யாரோ இத செய்திருக்கிறார்கள். மைதானத்திற்கு மேல் விமானங்கள் பறக்க அனுமதியில்லாதபோது இந்த விமானம் எங்கிருந்து வந்தது என விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின்போது சில விமானங்கள் “காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் குறுக்கு மறுக்காக பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விதிமுறைகளை மீறிய இங்கிலாந்து வீரர்: அபராதம் விதித்த ஐசிசி