Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3வது டி-20 போட்டி: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி!

india-srilanka
, சனி, 7 ஜனவரி 2023 (22:46 IST)
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில்,. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இதில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் அடித்து, 229 ரன்கள் இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த  இலங்கை அணியில், குசல் 23 ரன்களும், டசன் ஷனகா 23 ரன்களும், சில்வா 22 ரன்களும் அடித்தனர்.

எனவே, 16.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

எனவே இந்திய அணி இத்தொடரில் 2 போட்டிகளில் வென்று தொடரை வென்றது.

இப்போட்டியில்.சாஹல், ஹர்த்தி பாண்ட்யா தலா  2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்தீப் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் சர்மா தேர்வு