Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரியா அப்ஸ்காண்ட்: சுஷாந்த் சிங் தற்கொலையில் தொடர்பா?

ரியா அப்ஸ்காண்ட்: சுஷாந்த் சிங் தற்கொலையில் தொடர்பா?
, வியாழன், 30 ஜூலை 2020 (10:39 IST)
மறைந்த நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத்தின் காதலில் ரியா தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 
 
சீரியலில் இருந்து படங்களில் நடிக்க துவங்கிய சுஷாந்த் சிங் கடந்த மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் பல காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.  
 
இந்நிலையில் தற்போது சுஷாந்த் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அதில், ரியா தற்கொலைக்கு தூண்டியதாகவும், பொருளாதாரரீதியாக அவரை ஏமாற்றி விட்டதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.   
 
ஏற்கனவே சுஷாந்த தற்கொலை விவகாரத்தில் ரியாவிடம் பல மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலையில் அவரது காதலி மீது சுஷாந்தின் தந்தை புகார் கொடுத்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பாட்னா ராஜீவ் நகர் போலீசார் ரியாவை கைது செய்வதற்காக மும்பை விரைந்துள்ளனர். 
 
இந்நிலையில் மும்பையில் உள்ள ரியாவில் வீட்டுக்கு சென்றபோது அவரை காணாததால் ரியா தலைமறைவாகி இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேடையில் குத்து டான்ஸ் ஆடி அமர்க்களப்படுத்திய அஜித் - வைரல் வீடியோ இதோ!