Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியங்காவுக்கும் விவகாரத்தா? கணவர் பெயரை தூக்கியதின் பின்னணி என்ன??

பிரியங்காவுக்கும் விவகாரத்தா? கணவர் பெயரை தூக்கியதின் பின்னணி என்ன??
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (12:22 IST)
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தனது சமூக வலைத்தளத்தில் உள்ள சுயவிவரங்களில் இருந்து ஜோனாஸை நீக்கியுள்ளார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

 
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் நவம்பர் 22 அன்று (நேற்று) தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் சுயவிவரங்களில் இருந்து 'சோப்ரா ஜோனாஸை' நீக்கினார். புகைப்பட பகிர்வு தளத்தில் அவரது சுயவிவரம் இப்போது பிரியங்கா என்று மட்டுமே குறிப்பிடுகிறது. 
 
ஆம், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது பெயரிலிருந்து 'சோப்ரா ஜோனாஸ்’-ஐ நீக்கிவிட்டு இணையத்தை கலக்கிவிட்டார். பிரியங்காவும் நிக் ஜோனாஸும் திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்துக்குச் செல்வதாக சமூக ஊடக பயனர்கள்  ஊகிக்கத் தொடங்கியுள்ளனர். 
 
இருப்பினும், பிரியங்காவின் தோழி ஒருவர் இது போன்ற செய்திகள் போலியானவை என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் இந்த விவாகரத்து வதந்திகள் அனைத்தும் வேடிக்கையானவை. பிரியங்கா தனது முதல் பெயரை மட்டும் பயன்படுத்த விரும்புகிறார். அவர் 'ஜோனாஸ்' மட்டுமல்ல, 'சோப்ரா'வையும் சேர்த்து தான் சமூக ஊடகங்களில் கைவிட்டுள்ளார் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிடிக்கலனா பாக்காதீங்க... ஜெய் பீம் குறித்து எஸ்.ஏ.சி!!