Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலிக்கு பிறகு பிரம்மாண்டமாக தொடங்கியது "ஆதிபுருஷ்"!

Advertiesment
prabhas
, செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:43 IST)
பாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவின் கவனிக்கப்பட வேண்டிய நாயகனாக மாறினார் பிரபாஸ். இப்படத்தை அடுத்து, அவர் நடிப்பில் வெளியான் சாஹோ மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு படுதோல்வி அடைந்தது.
 
அதையடுத்து அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் என்பவரின் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.
 
இதனையடுத்து இப்போது அவர் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. 
 
ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குவதாக படத்தின் இயக்குனர் ஓம் ராவத் ட்விட்டரில் தெரிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ் பி பி குடும்பத்தினரை சந்தித்த எல் முருகன்.. குஷ்பு போட்ட டிவீட்!