Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நேரத்தில் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் முடிவு

Advertiesment
ஒரே நேரத்தில் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் முடிவு
, சனி, 26 மே 2018 (07:57 IST)
ஒரே நேரத்தில் ‘க்ரிஷ்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹிருத்திக் ரோஷன் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருணாள் தாகூர், பங்கஜ் திரிபாதி, நந்திஷ் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்தப் படத்துக்குப் பிறகு தன்னுடைய சூப்பர் ஹிட் படமான ‘க்ரிஷ்’ படத்தின்அடுத்த பாகத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் ஒரே நேரத்தில் 3 மற்றும் 4ஆம் பாகங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஹிருத்திக் ரோஷன். இதற்கு முன்னால் வெளியான இரண்டு பாகங்களில் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் புதுமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
 
கடந்த இரண்டு பாகங்களில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் பிரியங்கா சோப்ரா என ஆளுக்கொரு பாகத்தில் ஹீரோயினாக நடித்தனர். 3 மற்றும் 4ஆம் பாகத்துக்கு புதிதாக இரண்டு ஹீரோயின்களைத் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னுடன் சேர்ந்து நடிக்க மருமகனுக்குத் தடைபோட்ட மாமனார்