Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

9 மாதத்தில் என் வயிற்றில் குழந்தை - கோபத்துடன் குவா குவா தகவல் சொன்ன தீபிகா!

Advertiesment
Deepika Padukone
, வியாழன், 9 ஜனவரி 2020 (17:46 IST)
பாலிவுட்டின் அழகிய தம்பதிகளான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் தங்களின் படங்களின் மூலம் ரசிகர்களிடம் அதீத அன்பைப் பெற்றவர்கள். திரையில் கெமிஸ்ட்ரி நிறையப் பெற்ற இந்த ஜோடிக்கு அதுவே அவர்களின் காதல் திருமணத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. 
 
நட்சத்திர நடிகர்களின் சொந்த வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில் அவரது ரசிகரக்ள் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. அந்த வகையில் தற்போது தீபிகா படுகோனே நடித்துள்ள சபாக் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. தற்ப்போது படத்தின் ப்ரோமோஷன்  வேலைகளில் பிசியாக இருக்கும் தீபிகா படுகோனே, சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது அவரிடம் கர்ப்பம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. உடனே கோபத்துடன் பதிலளித்த அவர், நானும், ரன்வீரும்  தற்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவதால் இப்போது கர்ப்பம் தரிக்கும் நிலையில் இல்லை 
 
குழந்தைகள் மீது எங்களுக்கு அதிக ஆர்வமும், பாசமும் உண்டு. நாங்கள் நிச்சயம் குழந்தை பெற்றுக்கொள்வோம். ஆனால், அதற்கான நேரம் இருக்கிறது. அப்போது, முடிவெடுத்து செயல்படுவோம். அதை உங்களிடமும் தெரிவிக்கிறேன். அடுத்த ஒன்பதாவது மாதத்தில், நான் சொல்லவில்லை என்றாலும், அதை நீங்களே அறிந்து கொள்ளலாம் என கூறி குழந்தை பெற்றுக்கொள்வதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபாக் திரைப்படத்திற்கு வரிவிலக்கு..