Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேரலைசுனாமி தாக்கிய டோங்காவில் என்ன நிலைமை?

நேரலைசுனாமி தாக்கிய டோங்காவில் என்ன நிலைமை?
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:36 IST)
மோதி உரையின்போது டெலிபிராம்டர் கோளாறு?
 
உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமை மாலை உரையாற்றியபோது திடீரென்று தன் பேச்சுக்கு இடையே இடர்பாட்டை சந்தித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.
 
பிரதமர் மோதி தனது பக்கவாட்டாகப் பார்த்து கேள்வி எழுப்புவதையும், பின்னர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கான காரணம், அவரின் டெலிப்ராம்ப்டர்ரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இது நடந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
 
சுனாமி தாக்கிய டோங்காவில் என்ன நிலைமை?
 
 
எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பசிபிக் தீவான டோங்காவில் வசிக்கும் மக்களுக்கு என்னவாயிற்று என்பது இரண்டு நாள்களாகியும் வெளியுலகத்துக்குத் தெரியவில்லை.
 
தொலைத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருப்பதால், நிலைமையை ஆராய விமானங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
 
கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததால் தீவு முழுவதும் சாம்பல் மூடியிருப்பதாகவும், ஒரு மீட்டர் உயரத்துக்கும் அதிகமான சுனாமி அலைகளால் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது.
 
எரிமலை வெடித்த சத்தம் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அப்பால் இருக்கும் நியூசிலாந்து வரைக்கும் கேட்டிருக்கிறது.
 
10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பெரு நாடு வரைக்கும் சுனாமி அலைகள் சென்றிருக்கின்றன.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 8,891 ஆக அதிகரிப்பு