Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்சப் வழி டிஜிலாக்கர்: இனி ஆவணங்களை வாட்சப் மூலமே பெறலாம்... மத்திய அரசு அறிவித்தது என்ன?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (16:35 IST)
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாத்து வைக்கும் டிஜிலாக்கர் வசதியை இனிமேல் வாட்சப் மூலம் பெறலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை டிஜிலாக்கர் என்ற தனி செயலியில் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த ஆவணங்களை, இனி வாட்சாப் மூலம் தேவைப்படும்போது பதிவிறக்கிக் கொள்ளலாம்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

அரசு சேவைகளை மென்மேலும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்ற வாட்சப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் டிஜிலாக்கர் கணக்கை உருவாக்குவது, உள் நுழைவது, குறிப்பிட்ட ஆவணங்களை தரவிறக்குவது ஆகிய சேவைகளை வாட்சாப் மூலமே பெற முடியும்.
ஆகிய இந்த 8 டிஜிலாக்கர் ஆவணங்களை வாட்சாப் மூலம் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவிட் தடுப்பூசிக்கான பதிவு, சான்றிதழ் உள்ளிட்ட கோவின் சேவைகளையும் இந்த வாட்சப் வசதி மூலமே பெற முடியும்.

சீரான நிா்வாகத்தை உறுதிசெய்யும் நோக்கில் அரசின் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் டிஜிலாக்கர் , வாட்சாப்பில் அரசு சேவை வசதி ஆகியவற்றின் மூலம் குடிமக்களுக்கு எளிமையான முறையில் டிஜிட்டல் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்படுவதாக இந்திய அரசின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கும் டிஜிலாக்கர் செயலியில் இதுவரை 5 பில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தற்போது வாட்சாப் மூலம் இதை அணுகும் வசதி உருவாகியிருப்பது, குடிமக்கள் தங்கள் ஆவணங்களை அவர்களது தொலைபேசி மூலமே பெற்றுக்கொள்ளும் அளவுக்கு எளிமையாகியுள்ளது.

வாட்சாப் மூலம் டிஜிலாக்கரை பயன்படுத்துவது எப்படி?

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments