Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களிக்கும் முறையில் மோசடி நடப்பதாக குற்றம் சுமத்தும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களிக்கும் முறையில் மோசடி நடப்பதாக குற்றம் சுமத்தும் டிரம்ப்
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (09:47 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவிலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

"என்ன நடக்கிறது என நாம் பார்க்க வேண்டும்," என வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாகாணங்களில் தபால் மூலம் வாக்களிக்கக் கோரி வருகின்றனர்.

புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் போட்டி வேட்பாளரான ஜோ பிடனிடம் அதிபருக்கான அதிகாரங்களை அமைதியான முறையில் வழங்குவாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "நான் வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அது மோசமான ஒன்று," என டிரம்ப் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதேபோன்றதொரு பதிலைத்தான் அளித்திருந்தார் டிரம்ப். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்ட டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

அது அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என ஹிலாரி அப்போது விமர்சித்திருந்தார்.

இருப்பினும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று பதவியேற்றார்.

 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் புதின்!!