Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாவோஸ் நாட்டில் டன் கணக்கில் போதை மருந்து பறிமுதல்: வரலாறு காணாத குவியல்

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (11:22 IST)
லாவோஸ் நாட்டு காவல் துறை ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய போதை மருந்துக் குவியலைக் கைப்பற்றியுள்ளது.

5.5 கோடி மெதாம்பிடமின் மாத்திரைகள் மற்றும் 1.5 டன்னுக்கும் அதிகமான கிறிஸ்டல் மெத் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றப் பிரிவு முகமை கூறியுள்ளது.
 
இது ஆசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப் பெரிய அளவிலான போதை மருந்து குவியல் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
 
தாய்லாந்து மற்றும் மியான்மர் எல்லைப் பகுதியான பொகெயோவில், பீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதித்த போது இத்தனை பெரிய அளவில் போதை மருந்து கடத்தப்படுவது தெரியவந்தது. தங்க முக்கோண சாலை என்று அழைக்கப்படும் இந்த பகுதி, பல ஆண்டு காலமாக போதை மருந்து தயாரிப்பின் சொர்க்கபுரியாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments