Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை தாலிபன் ஆதரிக்காது: ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (23:13 IST)
லெப்டிணன்ட் ஜெனரல் (ஓய்வு) அசத் துர்ரானி, ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்Image caption: லெப்டிணன்ட் ஜெனரல் (ஓய்வு) அசத் துர்ரானி, ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்.
 
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை தாலிபன் ஆதரிக்காது என்று கூறியிருக்கிறார், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான லெப்டிணன்ட் ஜெனரல் அசத் துர்ரானி.
 
பிபிசியின் உஸ்மான் ஜாஹித்திடம் பேசிய அவரிடம், ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியாவின் செல்வாக்கு மற்றும் தாலிபனின் புதிய ஆளுகையுடன் அந்நாட்டுக்கு உள்ள உறவு குறித்து கேட்கப்பட்டது.
 
அதற்கு துர்ரானி, "தமது சொந்த நலன்களை மனதில் வைத்தே தாலிபன் வெளிநாடுகளுடன் உறவைப் பேணும். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி," என்றார்.
 
தாலிபன் ஆளுகையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வெளியேறி விட்டதே என்று கேட்டபோது, "இந்தியா விரும்பி அங்கிருந்து வெளியேறவில்லை. அது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றே கருதுகிறேன்," என்று தர்ரானி பதிலளித்தார்.
 
"ஆப்கானிஸ்தானில் இந்தியா முதலீடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றே தாலிபன் எதிர்பார்க்கும். அந்நாட்டு சமூகத்தில் இந்தியாவுக்கு ஆழமான செல்வாக்கு உள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும், அதன் நலன்களில் இந்தியா அக்கறை காட்டி வந்துள்ளது. அந்த இரு நாடுகளும் வரலாற்றுபூர்வமான உறவைக் கொண்டுள்ளன. அதில் பாகிஸ்தான் கூட தலையிட விரும்பாது," என்று துர்ரானி தெரிவித்தார்.
 
அப்படியென்றால் தாலிபன் மீது பாகிஸ்தான் தமது செல்வாக்கை செலுத்துகிறதா என்று கேட்டபோது, முன்பும் சரி, இப்போதும் சரி தாலிபன் மீது எவ்வித செல்வாக்கையும் பாகிஸ்தான் செலுத்தவில்லை என்று துர்ரானி கூறினார்.
 
"தாலிபன் எந்தவொரு வெளிநாட்டிடம் இருந்து உத்தரவுகளை பெற்று செயல்படுவது கிடையாது. தங்களுடைய சொந்த நலன்களை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். யாருக்காகவும் பிறரை தாலிபன் ஆதரிக்க மாட்டார்கள்."
 
"பொது நல விவகாரங்களில் பாகிஸ்தானுடன் தாலிபன் இணக்கமாக உள்ளது. அதற்காக, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் தரப்பில் நடக்கும் ஆயுத போராட்டத்துக்கு தாலிபன் ஆதரவு தெரிவிக்காது. அது ஒருபோதும் நடக்காது," என்றார் துர்ரானி.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments