Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை நெருக்கடி: ரணில் அரசுக்கு ஆதரவு - எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

Advertiesment
Ranil Wickramasinghe
, திங்கள், 16 மே 2022 (23:47 IST)
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு எதிர்க்கட்சியான, ஐக்கிய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக முடிவு செய்துள்ளது.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
 
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது அவசியம். அதன்பிரகாரம், தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளும் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு அரசாங்கத்தின் பதவிகள் எதுனையும் பெறாமல், பாராளுமன்ற செயல்முறையின் கீழ் பூரண ஆதரவை வழங்க ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவுர்ணமியில் வேட்பாளரை வெளியிட்ட பகுத்தறிவு திமுக: முன்னாள் ஜெயக்குமார் கிண்டல் !