Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை 13 லட்சம் யுக்ரேனியர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (00:07 IST)
ஐ.நா அகதிகள் அமைப்பின் கருத்துப்படி, யுக்ரேனில் போரினால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 15 லட்சத்தைத் தாண்டக்கூடும்.
 
“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நாம் கண்ட மிக வேகமாக இடம்பெயரும் அகதிகள் நெருக்கடி இது,” என்று ஐ.நா அகதிகள் அமைப்பின் தலைவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
 
படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 13 லட்சம் மக்கள் ஏற்கெனவே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
 
போலந்து நாட்டின் அதிபருடைய கூற்றுப்படி, இதுவரை வந்த அகதிகளில் பாதிக்கும் மேலானவர்களை அந்நாடு ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
 
ஆனால், அனைத்து அகதிகளும் தாங்கள் முதலில் தப்பி வரும் நாடுகளில் தங்குவதைத் தேர்ந்தெடுப்பதில்லை.
 
உதாரணமாக, ருமேனியாவை எடுத்துக் கொள்ளலாம். போரின் முதல் எட்டு நாட்களில் அங்கு பயணித்த 200,000 பேரில் 140,000 பேர் பிற நாடுகளுக்குப் புறப்பட்டார்கள்ம் சுமார் 60,000 பேர் மட்டுமே ருமேனியாவில் இருந்ததாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
யுக்ரேன் எல்லையிலுள்ள நாடுகள், போரிலிருந்து வெளியேறும் பலருக்கும் முதல் புகலிடமாகச் செயல்படுகின்றன. ஏனெனில், அவர்கள் அங்கிருந்து மற்ற தொலைவிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments