Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சியில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி: கலெக்டர் விசாரணை!

திருச்சியில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி: கலெக்டர் விசாரணை!
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (15:12 IST)
திருச்சியில் இலங்கை அகதிகள் சிலர் திடீரென தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் இலங்கை அகதிகள் முகாமுக்கு நேரடியாக சென்று உள்ளார் 
 
திருச்சி மன்னார்புரம் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் பலர் ஒரு சில ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் திடீரென இன்று காலை தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது
 
அவர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டும், வயிற்றை கத்தியால் கிழித்தும் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றவர்களின் எண்ணிக்கை 15 என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ் அவர்கள் நேரடியாக அகதிகள் முகாமிற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். அவர்களிடம் உள்ள குறைகள் மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்று அவர் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மால்கள் திறக்க அனுமதித்தும் திறக்கப்படாதது ஏன்? காரணம் இதுதான்!