Publish Date: Thu, 15 Mar 2018 (12:40 IST)
Updated Date: Thu, 15 Mar 2018 (12:42 IST)
ஓர்ப் மீடியா அமைப்பு, ஒன்பது நாடுகளை சேர்ந்த 11 பிராண்டுகளின் பாட்டில் குடிநீரை சோதித்து பார்த்ததில், அவற்றில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த 11 பிராண்டுகளில் இந்தியாவை சேர்ந்த பிஸ்லரியும் அடக்கம். இந்த சோதனை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்தது. அந்த பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஷெர்ரி மேசன், "குறிப்பிட்ட பிராண்டுகளை குற்றம் சுமத்துவதற்காக இந்த சோதனையை மேற்கொள்ளவில்லை; எங்கும் பிளாஸ்டிக் நிறைந்து இருக்கிறது, பரவலாக காணப்படுகிறது என்பதை உணர்த்தவே இதனை மேற்கொண்டோம்" என்கிறார்.