Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் சயனைடு வெடி வைத்து விலங்குகளைக் கொல்ல அனுமதி!

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (07:36 IST)
அமெரிக்காவில் காடுகளில் வாழும் அபாயகரமான ஓநாய்கள், நரிகள் மற்றும் நாய்களை "சயனைடு வெடிகள்" பயன்படுத்தி கொல்லும் தற்போதைய நடைமுறையை தொடர அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


 
அமெரிக்க அரசு இந்த விவகாரத்தில் காட்டு விலங்குகளுக்கு எதிராக முடிவெடுக்க கூடாது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
 
இந்த முறையில், கொல்வதற்கு தீர்மானிக்கப்பட்ட விலங்குகள் பொறி வைத்து, ஏமாற்றி கூண்டிற்குள் பிடித்து, வாய்ப்பகுதியில் நஞ்சு தெளிக்கப்பட்டு சாகடிக்கப்படுகின்றன.
 
இதில் பிரச்சனை என்னவென்றால், விவசாயிகள் மற்றும் காடுவாழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உலை வைக்கும் விலங்குகளை பிடித்து நஞ்சை தெளித்து கொல்வதற்காக வைக்கப்படும் பொறிகளில் சில சமயங்களில் அபாயகரமற்ற விலங்குகளும், குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.


 
உதாரணமாக, விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறி ஒன்றில் 2017இல் சிக்கிக் கொண்ட குழந்தை ஒன்றுக்கு தற்காலிக பார்வை இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், அமெரிக்க அரசு குழந்தையின் பெற்றோருக்கு 1,50,000 டாலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அமெரிக்க அரசின் சேவை பிரிவுகளால் மட்டுமே பதிக்கப்படும் இதுபோன்ற பொறிகளில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கான காட்டு விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments