ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதில் தவறில்லை: பைடன்

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:51 IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் தனது முடிவு சரியானதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வைத்திருப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பிறகு நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார்.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து 1.2 லட்சம் பேரை விமானம் மூலம் மீட்ட படையினரை அவர் பாராட்டினார். இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிகழ்வை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் போரைத் தொடங்கின. தாலிபன்களின் ஆட்சி அகற்றப்பட்டது.
 
ஆயினும் 20 ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் படைகளை விலக்கிக் கொண்ட பைடனின் முடிவு உள்நாட்டிலும் நட்பு நாடுகள் மத்தியிலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. படைகளை விலக்குவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதும் தாலிபன்கள் மிக வேகமாக முன்னேறி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட கூகுள் அலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை: ஊழியர்கள் அதிர்ச்சி..!

9ஆம் வகுப்பு மாணவரை பிவிசி குழாயால் அடித்து காயப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்..தாய் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments