Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை

Advertiesment
கனடா
, செவ்வாய், 8 ஜூன் 2021 (10:06 IST)
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
 
இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான கனடிய நபர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும் மிக மோசமான தாக்குதலாகும் இது.
 
முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி பால் வைட் தெரிவித்துள்ளார்.
 
74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர்கள் மேல் கை வைத்தால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!