Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்!

Advertiesment
கடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்!
, சனி, 27 ஜூலை 2019 (12:28 IST)
ஆக்குபா கடற்கரையில் அமைந்துள்ள முதலாவது நீருக்குள் இருக்கும் ராணுவ அருங்காட்சியகத்தை ஜோர்டான் திறந்துள்ளது.
 
புதன்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், டாங்கிகள், படை துருப்புகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்பட நீரில் மூழ்கிய பல ராணுவ வாகனங்களை ஜோர்டான் அரசு இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற செய்துள்ளது.
webdunia
செங்கடலில் உள்ள பவள பாறைகளில் போர் புரிவது போன்ற வடிவமைப்பில் இந்த வாகனங்கள் உள்ளன. இங்கு சுற்றுலா வருவோருக்கு புதுவித அருங்காட்சியக அனுபவத்தை இந்த காட்சிப்படுத்தல் வழங்குகிறது என்று உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.
 
விளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் கண்காட்சி பொருட்களை இதில் சேர்க்க போவதாக ஆக்குபா சிறப்பு பொருளாதார மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.12,999-க்கு வொர்த்தே இல்ல: ரெட்மியின் இந்த போனை மட்டும் வாங்கிறாதீங்க...