Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுகாண்டா தலைநகர் கம்பாலாவில் ஐஎஸ் தாக்குதல் - 3 பேர் பலி

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (12:37 IST)
கிழக்கு ஆப்பிரிக்க நாடான யுகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகே, நவம்பர் 16ம் தேதி செவ்வாய்கிழமை தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

குண்டுகளை கட்டிக்கொண்டு வந்க மூன்று தற்கொலை குண்டுதாரிகள் நாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் உள்ள நகர காவல்துறை தலைமையகம் பகுதிக்கு சில அடி தூரத்தில் மூன்று நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
 
இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும், நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழு பொறுப்பேற்றிருப்பதாகவும் அமாக் முகமையின் செய்திகள் கூறியுள்ளது.
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடையாக சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் பொருத்தி இருந்த வெடிபொருள் ஆடையை வெடிக்க வைப்பதற்கு முன் அவரை பிடித்ததாக காவல்துறை கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments