Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரவில் வாக்கிங் போன இளம்நடிகை மர்மநபரால் தாக்குதல்: படுகாயம் என தகவல்!

இரவில் வாக்கிங் போன இளம்நடிகை மர்மநபரால் தாக்குதல்: படுகாயம் என தகவல்!
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (07:35 IST)
இரவில் வாக்கிங் போன இளம்நடிகை மர்மநபரால் தாக்குதல்: படுகாயம் என தகவல்!
இரவு நேரத்தில் வாக்கிங் போன இளம் நடிகை ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் இளம் நடிகை ஷாலு சௌராசியா என்பவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற் கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்ததாகவும் ஷாலு அதை கொடுக்க மறுக்கவே அந்த மர்ம நபர் நடிகை ஷாலுவை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் தெரிகிறது 
 
மர்மநபரின் தாக்குதலுக்கு உள்ளான நடிகை ஷாலுவின் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை ஷாலுவை தாக்கி செல்போனை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி