Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் அதிகரிக்கும் வெறிநாய்க்கடி நோய்: மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் அதிகரிக்கும் வெறிநாய்க்கடி நோய்: மத்திய அரசு உத்தரவு
, செவ்வாய், 24 டிசம்பர் 2019 (09:31 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
 
இந்து தமிழ்: வெறிநாய்க்கடி நோய் அதிகரிப்பு
வெறிநாய் கடி நோய் அதிகரிப்பதால், தடுப்பூசிகளை இருப்பு வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசிகளை தேவையான அளவு கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
உலக அளவில் 'ரேபீஸ்' எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. நாய் மட்டுமின்றி நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடிப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்நோயால் சராசரியாக ஆண்டுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் மட்டும் இந்நோய் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
 
வேட்டையாட சென்ற கர்ப்பிணிப் பெண்ணை கடித்து குதறிய நாய்கள்
மனிதருடன் பேச முகபாவங்களை பயன்படுத்தும் நாய்கள் - ஆய்வு
ரேபீஸ் நோய் அதிகரித்து வருவதையொட்டி, இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான அளவு தடுப்பூசியை கொள்முதல் செய்து வைத்துக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் ''வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் கடித்தால் அலட்சியமாக இருக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரிகிறதா பாஜக சாம்ராஜ்ஜியம்??