Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனது மார்பகங்கள் குறித்து பெருமைப்படுகிறேன்- இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர

sri lanka
, வியாழன், 23 ஜூன் 2022 (23:44 IST)
தனது மார்பகங்கள் குறித்து தான் பெருமை அடைவதாக முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
 
தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஹிருணிகா பிரேமசந்திர, போலீஸாருடன் முரண்பட்டிருந்தார்.
 
இதன்போது, ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் செல்ல முடியாதவாறு, போலீஸார் பாதுகாப்பு வேலிகளை அமைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை ஏற்படுத்தியிருந்தனர்.
 
இஸ்லாமிய புரட்சி, பெண்கள், ஆடைகள் - இரான் அன்றும் இன்றும்
இந்த நிலையில், ஹிருணிகா பிரேமசந்திர, அந்த தடைகளை மீறி, பிரதமரின் வீட்டிற்குள் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில், போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு ஏற்பட்டது.
 
போராட்டத்தில் ஹிருணிகா பிரேமசந்திர
 
இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சிலர், ஹிருணிகா பிரேமசந்திரவின் மார்பகங்கள் குறித்து தவறான பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
 
இந்த பதிவுகள் குறித்து, ஹிருணிகா பிரேமசந்திர, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
 
''எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமை அடைகின்றேன். நான் மூன்று அழகிய குழந்தைகளுக்கு இதனூடாக தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, எனது முழு உடலையும் அவர்களுக்கு அர்ப்பணித்தேன். (போலீஸாருடனான மோதல் காரணமாக) எனது வெளியில் தென்பட்ட மார்பகங்களை வைத்து கேலி, கிண்டல் செய்பவர்கள்,
 
தாம் குழந்தைகளாக இருந்த போது, அவர்களின் தாய்மார்களின் மார்பகக் முலைக்காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன். எப்படியும், எனது மார்பகங்கள் குறித்து நீங்கள் பேசி, மீம்ஸ்களை உருவாக்கி, சிரிக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்பது உங்களுக்கு தெரியவரும்" என அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
 
 
ஹிருணிகாவின் தாய்மையை அவமதிக்க வேண்டாம் - ரணில் விக்ரமசிங்க
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவின் தாய்மையை அவமதிக்கும் விதத்திலான புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
 
நாகரீகமான சமூதாயம் தாய்மையை அவமதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
தாய்மை என்ற கருப் பொருள் எல்லாவற்றிற்கும் மேலாக உயரிய இடத்தில் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?