Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எவ்வாறு குறிக்கப்படுகிறது ஈத் பெருநாள்? ஆச்சரியப்படவைக்கும் சிக்கலான நடைமுறை

Advertiesment
எவ்வாறு குறிக்கப்படுகிறது ஈத் பெருநாள்? ஆச்சரியப்படவைக்கும் சிக்கலான நடைமுறை
, வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (12:47 IST)
ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ஈராக் நாட்டில் இரண்டு முறைகளிலும் ஈத் நாள் குறிக்கப்படுகிறது. ஷியா பிரிவு மத தலைவரான அயோத்துல்லா அலி அல் சிஸ்டானியின் அறிவிப்பையும் அப்பிரிவு மக்களும், சிறுபான்மையினரான சுன்னி பிரிவு மக்கள் தங்கள் மத குருக்களின் அறிவிப்பையும் பின்பற்றுகின்றனர்.
 
பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு முதன் முறையாக ஈராக் நாட்டில் ஷியா மற்றும் சுன்னி பிரிவு மக்கள் ஒரே நாளில் ஈத் அல் பித்ர் நாளை கொண்டாடினர்.
 
இதே சமயத்தில் மதச்சார்பற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் துருக்கியில், வானியல் கணக்கீடுகளை கொண்டு ரமலான் மாதத்தின் துவக்கம் மற்றும் இறுதி நாள் முடிவு செய்யப்படுகிறது.
 
ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சமுதாய மதத்தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர். இது ஒரு வேளை, மற்ற முஸ்லிம் நாடுகளில் நிலவைப் பார்ப்பதை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுத்தும்.
webdunia

 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3000 மாணவர்களின் மதிப்பெண்கள் பூஜ்யம்.. திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவில் வினோதம்..!