Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைந்து 5 ஆண்டுகள் கழித்து, 2,000 கி.மீ. தூரத்தில் கிடைத்த பூனை

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (21:49 IST)
சாஷா
 
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த நபரொருவருக்கு சொந்தமான பூனை சுமார் 2,000 கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டு, உரிமையாளருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஓரிகான் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் பகுதியிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சாஷா எனும் அந்த பூனை சமீபத்தில் நியூ மெக்ஸிகோவின் சாண்டா பி நகரில் இருப்பது கண்டறியப்பட்டது.
 
சாஷாவின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோசிப்பை ஸ்கேன் செய்ததன் மூலம் அதன் உரிமையாளரின் வசிப்பிடம் குறித்து தெரியவந்ததாக உள்ளூரிலுள்ள வன விலங்குகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த பூனை விமானம் மூலம் தனது உரிமையாளரின் வீட்டை அடைந்தது.
 
சாஷா தொலைந்துபோன உடனேயே அதுகுறித்து புகார் செய்ததாக கூறும் அதன் உரிமையாளர் விக்டர் உசோவ், ஐந்தாண்டுகள் ஆன நிலையில், தனது பூனை மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையே இழந்து இருந்ததாகவும், இந்நிலையில் மீண்டும் சாஷாவுடன் இணைந்தது வியப்பளிப்பதாகவும் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments