Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவை விட பிற நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா தொற்று!!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (15:05 IST)
கொரோனா வைரஸ் தொற்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார்.
 
உலக நாடுகள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க போராடி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.இரண்டாவது நாளாக சீனாவுக்கு வெளியே அதிகப்படியான கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இரான் மற்றும் இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டிலிருந்து பயணம் செய்பவர்களாலும் இந்த தொற்று பரவி வருகிறது.
 
இரானில் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரான் பெண்கள் மற்றும் குடும்ப நல விவகாரங்களின் தலைவர் மாசுமே எப்டெகாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
சர்வதேச அளவில் சுமார் 50 நாடுகளில் 80,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2800 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதில் பலர் சீனாவின் ஹூபே மாகணத்தை சேர்ந்தவர்கள்.
 
பல நாடுகளில் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வர்த்தக போக்குவரத்து குறையலாம் என்ற அச்சத்தால் பங்குச் சந்தை மதிப்புகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments