Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன விமான விபத்து: விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:42 IST)
132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை.


இந்நிலையில், விபத்துக்கு உள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடுதல் குழுவினர் கண்டறிந்துள்ளதாக, அரசு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனை இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீன விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இரு தினங்களாக நடந்த தேடுதலுக்குப் பின் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தோர் எத்தனை பேர் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விமானத்தில் பயணித்த 132 பேரில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருக்க மாட்டார் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments