முகமது நபியின் கேலிச்சித்திரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (17:27 IST)
முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் அதிபரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
 
இந்த நிலையில், பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் முடிவை மத்திய கிழக்கு நாடுகள் கைவிட வேண்டுமென்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
 
பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் "அடிப்படை அற்ற" அழைப்புகள் "ஒரு தீவிர சிறுபான்மை குழுவால் மேற்கொள்ளப்படுவதாக" பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்
 
முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக பிரான்சில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்ரோங் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த புறக்கணிப்பு போராட்டத்தை மத்திய கிழக்கு நாடுகள் கையிலெடுத்துள்ளன.
 
முன்னதாக, "இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது" என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் எதிர்வினையாற்றியிருந்தார். இதே கருத்தை நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) அவர் உறுதிப்படுத்தினார்.
 
முகமது நபி அல்லது அல்லாஹ்வின் (கடவுள்) சித்தரிப்புகள் அல்லது உருவங்களை இஸ்லாமிய பாரம்பரியம் வெளிப்படையாக தடைசெய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

நேற்று போலவே இன்றும்.. காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது தங்கம் விலை..!

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு சென்றீர்களா? கரூருக்கு மட்டும் சென்றது ஏன்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுங்கள்.. வழக்கை உடனே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படையுங்கள்: நீதிமன்றம் உத்தரவு..!

இனிமேல் கல்வி தேவையில்லை, வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸ்' ஆகிவிட்டன!: முன்னாள் பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments