Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடனத்தில் தொடங்கி கண்ணீரில் முடிந்த பிரேசிலின் உலகக் கோப்பை கனவு

brazil- Croatia
, சனி, 10 டிசம்பர் 2022 (22:44 IST)
உலகக் கோப்பையில் பிரேசில் மகிழ்ச்சியுடன் காலிறுதிச் சுற்றில் நுழைந்தது. ஆனால் இறுதிப் போட்டியை நோக்கி நகர்வது என்ற  அவர்களின் கனவுகள் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் கண்ணீருடன் முடிந்தது.
 
குரோஷியாவின் பயிற்சி பெற்ற நட்சத்திர வீரர்கள் பெனால்டி மூலம் பிரேசிலின் ஆறாவது கோப்பை நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்ததனர்.  மீண்டும் ஒரு ஐரோப்பிய தேசத்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
ஆடவர் தேசிய அணிக்கான பீலேவின் அதிகாரப்பூர்வ ஸ்கோர் சாதனையை சமன் செய்யும் வகையில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில், குரோஷிய அணி வீரர்களின் வலுவான தடுப்பாட்டங்களை கடந்து முதல்கோலை போட்டார் நெய்மார். 
 
இதனால், நெய்மர் இந்த ஆட்டத்தின் ஹீரோவாக இருப்பார் என்று தோன்றியது. ஆனால் தவறவிடப்பட்ட  ஐந்தாவது பெனால்டியால், இதுதான் தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதி போட்டி என கூறியிருந்த அவர்   கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார்.
 
ஆட்டம் முடிந்ததும் பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைடீ பணியில் இருந்து ஓய்வு பெறுவது உறுதி செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டில் கோப்பா அமெரிக்கா போட்டியின் போதே நெய்மார் சர்வதேச ஓய்வு பற்றி சூசகமாக கூறினார். எனவே, 61 வயதான டைடீ  2019ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா போட்டியின் வெற்றியைக்கூட கொண்டாட முடியவில்லை.
 
 
குரோஷியாவுடனான ஆட்டம் தொடக்கத்தில் 90 நிமிடம் சுவாரஸ்யமாக இருந்தது, ஆனால் யார் ஒருவருக்கும் சாதகமாக  முடியவில்லை, எனவே போட்டியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
 
தனது நாட்டிற்கு மிகவும் தேவைப்படும்போது அதனோடு தான் இருப்பதாக நெய்மர் நினைத்தார், அந்த கூடுதல் நேரத்தில் நெய்மர், மின்னல்வேகத்தில் ஒரு கோல் அடித்தார். 
 
106-ஆவது நிமிட த்தில் அவர் போட்ட கோல் அவரது 77வது சர்வதேச கோலாகும், ஃபிஃபா பதிவுகளின்படி, பீலேவின் சாதனையை அவர் சமன் செய்தார்.
 
ஆனால் அடுத்த நான்கு நிமிடங்களில் குரேஷியாவின் புருனோ பெட்கோவிச் இரு கோல் அடித்து இதனை சமப்படுத்தினார் - அது குரோஷியாவின் இலக்கை நோக்கிய ஒரே ஷாட் ஆக இருந்தது. பெனால்டி கிக்கை சரியாக கையாண்டதால் அவர்களின் முன்னேற்றத்தின்  நம்பிக்கை காப்பற்றப்பட்டது.
 
இம்முறை நெய்மர் களத்தில் தவிர்க்க இயலாதபடி பதைபதைப்பில் மூழ்கியதால், அவரது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. எதிரணியான குரேஷிய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 
 
அவர் ஐந்தாவது பெனால்டி எடுத்தார்.  ஆனால் குரேஷியாவின் மார்கினோஸ் கோல் போஸ்ட்டில் தடுத்தாடியதால் அந்த வாய்ப்பு நழுவியது. அவர்களின் தலைவிதியை மார்கினோஸ் மாற்றி எழுதினார். 
.
2014 ஆம் ஆண்டு சொந்த நாட்டில்  நடந்த உலகக் கோப்பை போட்டியில் நெய்மரின் பங்கேற்பு முதுகில் ஏற்பட்ட காயத்தால் முடிவுக்கு வந்தது, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அதே கட்டத்தில் பெல்ஜியத்தால் தோற்கடிக்கப்பட்டனர்.
 
இங்கே நெய்மார் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய கடைசி வீரர்களில் ஒருவராக இருந்தார். பிரேசிலின் ரசிகர்கள் அவநம்பிக்கையுடன் ஸ்டாண்டில் அமர்ந்தனர், கத்தாரில் அவர்களின் நம்பிக்கைகள் முடிவுக்கு வந்தன.
 
"இது போன்ற சூழல்களில் வீரர்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது , எனவே, அதற்கு  மனதளவில் அதிகம் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் வீரர்கள் இந்த கடைசி பெனால்டி கிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
 
ஆனால் ஜெர்மனியின் முன்னாள் முன்கள வீரர்  கிளின்ஸ்மேன் பிபிசி ஒன்னிடம் பேசியபோது, மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். "அவர்தான் என்னுடைய முதலாவது பெனால்டி அடிப்பவராக இருந்திருப்பார். நீங்கள் அதற்கான சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்," என்றார். 
 
பிரேசிலின் உலகக் கோப்பை கனவு ஒரு ஐரோப்பிய நாட்டினால் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக முடிவுக்கு வந்தது, கடைசியாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்  ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியை பிரேசில் தோற்கடித்தது. 
 
இது ஐந்து உலகக் கோப்பை வெற்றிகளில் பிரேசிலின்  கடைசி வெற்றியாகும். மேலும் ஐரோப்பா அல்லாத அணி கோப்பையை கைப்பற்றி 20 ஆண்டுகள் ஆகிறது.
 
இந்த புள்ளிவிவரங்கள் பிரேசிலுக்கு கடுமையான சலிப்பை உருவாக்கும்.
 
தென் அமெரிக்க அணி மெதுவாகவே ஆடத்தொடங்கியது. கடைசி ஏழு போட்டிகளில் ஆறில் முதல் பாதியில் அவர்கள் கோல் அடிக்கவில்லை.
 
வினிசியஸ் ஜூனியர் அல்லது நெய்மார் தொடக்க நேரத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தால் வேறு முடிவுகள் வந்திருக்கலாம்.
 
உலகக் கோப்பை வரலாற்றில்  கூடுதல் நேரத்தில் தொடக்க கோலை அடித்த பிறகு,  நாக் அவுட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணியாகியிருக்கிறது பிரேசில். 
 
உலகத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த அணி அரையிறுதிக்கு கடைசியாக முன்னேறியது 1998-ஆம் ஆண்டில்தான். அதுவும் பிரேசில்தான். அதன் பிறகு முதலிடத்தில் இருக்கும் அணிக்கு அரையிறுதி வாய்ப்புக்கூட கிடைக்கவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஹாராஷ்டிராவில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து! 2 பேர் பலி