Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டு மிரட்டல் - லண்டனில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (21:35 IST)
ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலால் லண்டன் ஸ்டன்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.
ஏஐ 191 விமானம் மும்பையிலிருந்து அமெரிக்காவில் உள்ள நியூவாக்கிற்கு சென்று கொண்டிருந்தது.
 
விமானம் தரையிறங்கிய சமயத்தில் பிரிட்டனின் ராயல் ஏர் போர்ஸ் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியது.
 
வெடிகுண்டு மிரட்டலால் விமானம் தரையிறக்கப்பட்டது என முதலில் ட்வீட் செய்த ஏர் இந்தியா பின்னர் அந்த ட்வீட்டை நீக்கியது. பிறகு இந்த சம்பவத்தை பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறியது.
 
விமானம் லண்டன் நேரப்படி காலை 10.15 க்கு தரையிறக்கப்பட்டு பின்னர் விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தப்படாத பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விமான நிலையத்தின் முக்கிய முனையத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஸ்டன்ஸ்டெட் விமான நிலையம் கூறியுள்ளது.
 
அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்று தகவல் இன்னும் தெரியவில்லை.
 
எஸ்ஸெக்ஸ்-இல் உள்ள விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் செல்லும்போது பாதுகாக்க லிங்கன்ஷையரில் இருந்து ராயல் ஏர் போர்ஸ்-இன் விமானங்கள் சென்றதாக ராயல் ஏர் போர்ஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
 
அந்த விமானங்கள் ஒலியைவிடவும் வேகமான 'சூப்பர் சோனிக்' வேகத்தில் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளவை என்றும் அருகில் உள்ள டெர்ப்ஷையரில் அந்த அதிர்வலைகளால் பெரும் ஒலி (சோனிக் பூம்) கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments