Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விநியோகிக்கும் பிரிட்டன் ராணுவம்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (13:43 IST)
பிரிட்டனில் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல் பங்குகளில் போதிய அளவுக்கு எரிபொருள் இல்லை. 
 
எனவே மக்கள் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இப்பிரச்சனையை சரி செய்ய, பிரிட்டன் அரசு ராணுவத்தை களமிறக்கியுள்ளது.
 
திங்கட்கிழமை முதல் பிரிட்டன் ராணுவத்தினர் கராஜ்களுக்கு எரிபொருளை விநியோகிப்பர் என அரசு தரப்பு கூறியுள்ளது. எரிபொருள் விநியோகப் பிரச்சனையை எதிர்கொள்ளும் பணியில் சுமார் 200 ராணுவத்தினர் (அதில் 100 பேர் ஓட்டுநர்கள்) ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டிலிருந்து 300 எரிபொருள் டேங்கர் லாரி ஓட்டுநர்களை வரவழைத்து, அவர்கள் வரும் மார்ச் மாதம் வரை பணியாற்ற வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
 
பிரிட்டனில் 1,100 பெட்ரோல் நிரப்பும் பங்குகளிடம், பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய கருத்துக் கணிப்பில் 26 சதவீத பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் கையிருப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்.. காத்திருக்கும் பதவி என்ன?

காங்கிரஸ் கட்சியின் ரூ.661 கோடி சொத்துக்கள் கையப்படுத்தப்படுகிறதா? நோட்டீஸ் அனுப்பிய ED..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான் தான் பாமக தலைவர்: அன்புமணி

அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்.. புதிய தலைவராக பதவியேற்பு..!

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

அடுத்த கட்டுரையில்
Show comments