Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக் தடையால் சீன நிறுவனத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (09:38 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை - டிக் டாக் தடையால் இழப்பு
இந்தியாவில் டிக்-டாக் மீது விதிக் கப்பட்ட தடையால், அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சீன அரசு ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

சீன செயலிகளை தடை செய்யும் இந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்'-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித் துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட் டுள்ளது என சீன அரசு ஊடக மான 'குளோபல் டைம்ஸ்' கட்டுரையை மேற்கோள் காட்டி இந்து தமிழ் திசை கூறுகிறது.

அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்யப்பட்டதை விட இரு மடங்கு இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு தடை விதித்ததால், சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நம்பிக்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்-டாக் செயலிக்கு முக்கிய வருவாய் ஆதார நாடாக இந்தியா இல்லாவிடினும் அந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்த முன் னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையில் பைட்-டான்ஸ் சுமார் ரூ.7,473 கோடி முதலீடு செய்துள்ளது என்கிறது அந்தச் செய்தி.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments