Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் 43 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையில் 43 இந்திய மீனவர்கள் கைது
, ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (23:45 IST)
யாழ்ப்பாணம் − நெடுந்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
சனிக்கிழமை இரவு இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக 6 படகுகளில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் - மயிலிட்டி மீனவத் துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
கரைக்கு அழைத்து வரும் மீனவர்கள், சுகாதார நடைமுறைக்கு அமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.
 
அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன அழுத்தம் & தற்கொலை எண்ணங்களை தடுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி