Publish Date: Fri, 29 Jun 2018 (13:45 IST)
Updated Date: Fri, 29 Jun 2018 (13:47 IST)
ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் சூரியன் ஸ்லோகத்தையும் சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் வந்து சேரும்.
சூரியன் ஸ்லோகம்:
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.
திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் சந்திரன் ஸ்லோகத்தையும் சொல்லிவந்தால், சந்திர கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் வந்து சேரும்.
சந்திரன் ஸ்லோகம்:
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி.